Posts

லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்?

Image
லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை. துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே" என்கிறார் அபிராமி பட்டர். சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள் பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும். சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார். தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன். இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. இது நோய்களைப்போக்கும். செல்வத்தை அளிக்கும். அபமிருத்யுவை போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம்) நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும். கங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டைk செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் ச

நாராயண மந்திரம்

Image
நாராயண மந்திரம் - அதுவே நாளும் பேரின்பம் பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து ... பரமன் அருள் தரும் சாதனம் ... (நாராயண மந்திரம்) உடலினை வருத்தி மூச்சினை அடக்கும் தவத்தால் பயனில்லை ! உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும் யாகங்கள் தேவையில்லை ! மா தவ மது சூதனா என்ற மனதில் துயரமில்லை (நாராயண மந்திரம்) ஆதியும் அந்தமும் = நாராயணனே அன்னையும் தந்தையும் = நாராயணனே பக்தியும் முக்தியும் = நாராயணனே பகலும் இரவும் = நாராயணனே பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து, பரமன் அருள் தரும் சாதனம் (நாராயண மந்திரம்) நாராயணா ஹரி நாராயணா நாராயணா லக்ஷ்மி நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா லக்ஷ்மி நாராயணா... !!! Source - Mantras & Slokas in tamil - மந்திரம்  & ஸ்லோகம்

பழையமுதும்...மாவடுவும்

Image
ரங்கநாத பெருமான் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் எல்லா நாளுமே திருநாள் தான். அதில் வித்தியாசமான, ஆனால் எல்லோரையும் நெகிழ வைக்கும் திருவிழா ஒன்று பங்குனி பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் நாள் நடைபெறுகிறது.  பழைய சோறும், மாவடுவும் என்று புகழப்படும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ரங்கநாத பெருமான் ஶ்ரீரங்கம் விட்டு ஜீயர்புரம் என்ற ஊருக்கு கிளம்பி செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி பெருமாளுக்கு நடைபெறுகிறது.  அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர் ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் ஆண்டவரின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெறுகிறது.  அதன்பிறகு முகம் திருத்தும் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த திருவிழாவில் ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும் அளிக்கப்படுகிறது. வெண்ணையும் மண்ணையும் உண்ட அந்த ஆதிமூல பெருமானுக்கு பழைய சோறு, மாவடுவும் விருந்தளிக்கப்படுகிறது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.  ஆம், இதன் பின்னால் நெஞ்சை உருக்கும் ஒரு கதை உள்ளது. ஏழைகளுக்கு உதவும் பரந்தாமன் அன்றோ திருமால், அவன் ஒரு ஏழைப

அனுமாருக்கு மட்டும் செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா ?

Image
ராவணன் காவலில் சீதாபிராட்டி இருந்த போது, சீதாபிராட்டியைத் தேடி இலங்கை வந்தார் ஹனுமார். அங்கு மரத்தடியில் அமர்ந்து இருந்த சீதாபிராட்டியை நோக்கினார். முதலில் அவளது காலில் இருந்த மெட்டியை நோக்கிப் பார்த்தப்பின், அவளது நெற்றியில் உள்ள குங்குமத்தைப் பார்த்தபோது, அங்கு குங்குமத்திற்குப் பதில் செந்தூரம் இருந்ததைக் கண்டார். அம்மா நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக ஏன் செந்தூரம் உள்ளது என ஹனுமான் கேட்க, அதற்கு சீதாபிராட்டி, 'மைந்தா, என் அன்பான கணவரின் நினைவு மட்டும் தான், எப்போதும் என்னுடம் இருக்க வேண்டும் என நினைத்தே, செந்தூரத்தை இட்டுக் கொண்டேன். ஏன் என்றால் தூய்மையான செந்தூரத்தை,எத்தனை அழித்தாலும் அது முழுவதுமாக அழியாமல் அதன் கறையை விட்டு வைக்கும்.அது போலத்தான் என்னிடம் இருந்து என் கணவரின் நினைவை மாற்றவே முடியாது என்பதை காட்டவே, அதை இட்டுக் கொண்டேன் என்றாராம் சீதாபிராட்டி. அதைக் கேட்ட ஹனுமார் புல்லரித்துப் போய், ராமரே என் நினைவில், மற்றும் நான் செய்யும் அனைத்திலும் இருக்கட்டும் என்ற மனதோடு,ராம நாமத்தை ஜபித்தபடி தனது உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டாராம். அதனால் தான் ஹனுமாருக்கு செந

கேட்டதை அள்ளித்தரும் முனீஸ்வரர் மூல மந்த்ர பிரயோகம்

Image

முனீஸ்வரன் பூஜையில் ஆவேச சாமி ஆட்டம்

Image

முனீஸ்வரர் அழைப்பு | குலதெய்வம் முனீஸ்வரர் | Muneeswarar Alaippu

Image
Source - Apoorva Audio